துளசி தேநீர்

துளசி தேநீர்






பொருட்கள்:

துளசி இலை        - 100 கிராம்
புதினா இலை      -100 கிராம்
நன்னாரி வேர்     -100 கிராம்
ஏலரிசி                    - 10  கிராம்
இலவங்கப்பட்டை - 10 கிராம்
சீரகம்                        -10 கிராம்
தனியா                     - 10 கிராம்
வெண்மிளகு          - 10 கிராம்
ஓமம்                         -   5 கிராம்

செய்முறை:
       முடிந்தால் இலைகளைப் பச்சையாக  பறித்து நிழலில் உலர்த்தவும்.
இல்லை நாட்டு மருந்துக் கடையில் அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.
மேலே கூறியுள்ள பொருட்களை சூரணித்து அனைத்தையும் ஒன்றாக கலந்து காற்றுப் புகாமல் கண்ணாடி பாட்டிலில் வைக்கவும். பிறகு எப்பொழுதும் நாம் தேநீர்போடுவது
போலத்தான்.
    நீர் ஊற்றிதேவையான அளவு துளசி கலவையைப் போடவும் தேவை என்றால் பால் சேர்க்கலாம்.சர்க்கரை அல்லது பனை வெல்லம் பயன்படுத்தலாம்.நாள் ஒன்றுக்கு இருமுறை பயன் படுத்தலாம்.

பயன்கள்:

சளி, இருமல், கவலை, பதட்டம் ஆகியவை குறைந்து உடல் மற்றும் மனம், ஆன்மா ஆகியவை சாந்தம் அடையும். ரத்தத்தை சுத்தப்படுத்தி ரத்த  அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை வலுவாக்கிவிடும். தொண்டை அடைப்பு மற்றும் சுவாசம் அடைப்பு நீங்கிவிடும். காய்ச்சல், உடல் வலி மற்றும் உடலின் எல்லா கெட்டகிருமிகள் அழித்து செல்களை புதுப்பிக்கும்.
தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் குறையும்.

சுபன் சித்தா
பரம்பரை சித்த வைத்தியர்
Cell:- +91-8072818552

https://www.facebook.com/subansiddha/

1 comment:

CORONAVIRUS

சிர ஓட்டின் பற்பம்.  இச் செய்முறையை திண்டிவனம் சாமியார் எனது சிறிய பாட்டனாருக்கு 1946ஆம் ஆண்டு கூறியது. எனது சிறிய பாட்ட...